logo

Division of Event                     : Administration Programme

Date                                          :  13-08-2022

Title of the Event                    : Azadi Ka Amrit Mahotsav

“ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” – 75 வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 11-8-2022 முதல் 17-8-2022 வரை தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பிரார்த்தனை கூடத்தில் நடைபெறுகின்றன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி இன்று (13-8-2022) நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் திரு. முருகன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு மற்றும் முதன்மையர் முனைவர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அசோக்குமார் விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு. ஐயர் என்ற தலைப்பிலும், மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவர் செல்வன் அய்யாத்துரை விடுதலைப் போராட்ட வீரர் தில்லையாடி வள்ளியம்மை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். பொருளியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அருள்மாறன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.